அமீரகத்தின் மனிதநேய ஜனநாயக கட்சியின் அங்கமான மனிதநேய கலாச்சார பேரவையின் செயற்குழு கூட்டம், அல்-அய்னில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது..
அமீரக செயலாளர் #மதுக்கூர்_அப்துல்_காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமீரக பொருளாளர் #அதிரை_அஸ்ரப் துணை செயலாளர்கள் முகமது அலி ஜின்னா, அபுல் ஹசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்..
துபாய்,அபுதாபி,ஷார்ஜா,அல் அய்ன் மண்டல நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அல் அய்ன் மண்டல செயலாளர் நாச்சிகுளம். அசாலி அஹமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பின் இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான் #வெற்றியின்_போது_நபித்தோழர்கள் என்ற தலைப்பிலும், அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் #செய்ய_வேண்டிய_பணிகள் குறித்தும் உரை நிகழ்த்தினர்.
#வெற்றி_பெற்று_சட்டமன்றம்_சென்ற #மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி அவர்கள் தாயகத்தில் இருந்து சிறப்புரை நிகழ்த்தினார்.
பொதுச்செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களை அமீரக நிர்வாகம் மற்றும் மண்டல நிர்வாகங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், செயற்குழு கூட்டத்தில்
அமீரகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மண்டல வாரியாக கிளைகள் அமைத்தல், அதிரை மஜக அலுவலகம் தாக்கப்பட்டதற்க்கு கண்டனம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அல் அய்ன் மண்டலத்தின் மூத்த நிர்வாகி M.A.சர்புதீன் அவர்கள் நன்றி கூற இனிதே நிறைவடைந்து புதிய உற்சாகத்தோடு மண்டல நிர்வாகிகள் சென்றனர்.
#லட்சிய_பயணமே
#இறைவன்_அருளால்
#நிச்சயம்_வெல்லுமே
தகவல் : மஜக ஊடகப்பிரிவு